districts

ஊட்டசத்து குறைபாடு:  வீடு, வீடாக கணக்கெடுப்பு

பொன்னேரி,பிப்.3- மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.  மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேனகா,  குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் சசிகலா, அங்கன்வாடி ஆசிரியர் ரகுமாபீ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.